அருணாசல அக்ஷரமணமாலை | Arunachala Aksharamanamalai | Arule Ramana | Unnikrishnan | Vijay Musicals
Hellow guys, Welcome to my website, and you are watching அருணாசல அக்ஷரமணமாலை | Arunachala Aksharamanamalai | Arule Ramana | Unnikrishnan | Vijay Musicals. and this vIdeo is uploaded by Vijay Musical at 2017-10-04T18:44:01-07:00. We are pramote this video only for entertainment and educational perpose only. So, I hop you like our website.
Info About This Video
Name |
அருணாசல அக்ஷரமணமாலை | Arunachala Aksharamanamalai | Arule Ramana | Unnikrishnan | Vijay Musicals |
Video Uploader |
Video From Vijay Musical |
Upload Date |
This Video Uploaded At 05-10-2017 01:44:01 |
Video Discription |
Arunachala Akshara Manamaalai || Tamil Lyrical Video || Composer : Bhagawan Ramana Maharishi || Singer : Unnikrishnan || Music : Pradeep || Video Powered by Kathiravan Krishnan || Tamil Traditional || Vijay Musicals || Thiruvannamalai | Lord Shiva, Aksharamanamalai with Tamil lyrics
Lyrics :
அருணா அருணமணி கிரானா வலிநிகர்
தரும் அக்ஷர மனமகிழ் மாலை
தெருள்நாடியதிரு அடியர்த்தெருமரல்
தெளியபரவுதல் பொருளாக
கருணாகரமுனி ரமணாரியன்
உவகையினால் சொலியது கதியாக
அருணாச்சலமென அகமே அறிவொடும்
ஆள்வார் சிவனுலகு.. ஆள்வாரே..
அருணாச்சல வரற்கு ஏற்ற
அக்ஷரமணமாலை சாற்றக்
கருணாகர கணபதியே
கரம் அருளிக் காப்பாயே
அருணாச்சலசிவ அருணாச்சலசிவ
அருணாச்சலசிவ அருணாச்சலா !
அருணாச்சலசிவ அருணாச்சலசிவ
அருணாச்சலசிவ அருணாச்சலா !
அருணாச்சலம் என அகமே நினைப்பவர்
அகத்தை வேரறுப்பாய் அருணாச்சலா !
அழகு சுந்தரம்போல் அகமும் நீயும் முற்று
அபின்னமாய் இருப்போம் அருணாச்சலா !
அகம் புகுந்து ஈர்த்து உன் அக குகை சிறையாய்
அமர்வித்து என்கொல் அருணாச்சலா !
ஆருக்கா எனை அண்டனை அகற்றிடில்
அகிலம் பழித்திடும் அருணாச்சலா !
இப்பழி தப்பு, உனை ஏன் நினைப்பித்தாய்
இனியார் விடுவார் அருணாச்சலா !
ஈன்றிடும் அன்னையின் பெரிதருள் புரிவோய்
இதுவோ உனது அருள் அருணாச்சலா !
உனை ஏமாற்றி ஓடாது உளத்தின் மேல்
உறுதியாய் இருப்பாய் அருணாச்சலா !
ஊர் சுற்றும் உளம் விடாது உனைக் கண்டு அடங்கிட
உன் அழகைக் காட்டு அருணாச்சலா !
எனை அழித்து இப்போது எனைக் கலவாவிடில்
இதுவோ ஆண்மை அருணாச்சலா !
ஏனிந்த உறக்கம் எனைப்பிறர் இழுக்க
இது உனக்கு அழகோ அருணாச்சலா !
ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது
அகத்தில் நீ இலையோ அருணாச்சலா !
ஒருவன் ஆம் உன்னை ஒளித்து எவர் வருவார்
உன் சூதேயிது அருணாச்சலா !
ஓங்காரப் பொருள் ஒப்பு உயர்வு இல்லோய்
உனை யார் அறிவார் அருணாச்சலா !
ஔவை போல் எனக்குன் அருளைத் தஎது எனை
ஆளுவது உன் கடன் அருணாச்சலா !
கன்ணுக்குக் கண்ணாய்க் கண் இன்றிக்காண் உனைக்
காணுவது எவர் பார் அருணாச்சலா !
காந்தம் இரும்பு போல் கவர்ந்து எனை விடாமல்
கலந்து எனோடு இருப்பாய் அருணாச்சலா !
கிரி உரு ஆகிய கிருபைக் கடலே
கிருபை கூர்ந்து அருளுவாய் அருணாச்சலா !
கீழ்மேல் எங்கும் கிளர் ஒளி மணி என்
கீழ்மையைப் பாழ்செய் அருணாச்சலா !
குற்றம் முற்று அறுத்து எனைக் குணமாய்ப் பணித்தாள்
குரு உருவாய் ஒளிர் அருணாச்சலா !
கூர்வாட் கண்ணியர் கொடுமையில் படாது அருள்
கூர்ந்து எனைச் சேர்ந்து அருள் அருணாச்சலா !
கெஞ்சியும் வஞ்சியாய்க் கொஞ்சமும் இரங்கிலை
அஞ்சல் என்றே அருள் அருணாச்சலா !
கேளாது அளிக்கும் உன் கேடு இல் புகழைக்
கேடு செய்யாது அருள் அருணாச்சலா !
கையினில் கனி உன் மெய்ரசம் கொண்டு உவகை
வெறி கொள அருள் அருணாச்சலா !
கொடியிட்டு அடியரைக் கொல் உனைக் கட்டிக்
கொண்டெ ங்கென் வாழ்வேன் அருணாச்சலா !
கோபம் இல் குணத்தோய் குறியாய் எனைக்கொளக்
குறை என்செய்தேன் அருணாச்சலா !
கௌதமர் போற்றும் கருணை மாமலையே
கடைக்கணித்து ஆள்வாய் அருணாச்சலா !
சகலமும் விழுங்கும் கதிர் ஒளி இன(ன்) மன
சலசம் அலர்த்தியிடு அருணாச்சலா !
சாப்பாடு உன்னைச் சார்ந்து உணவா யான்
சாந்தமாய்ப் போவன் அருணாச்சலா !
சித்தம் குளிரக் கதிர் அத்தம் வைத்து அமுத
வாயைத்திற அருண்மதி அருணாச்சலா !
சீரை அழித்து நிர்வாணமாச் செய்து அருள்
சீரை அழித்து அருள் அருணாச்சலா !
சுகக்கடல் பொங்கச் சொல் உணர்வு அடங்கச்
சும்மா பொருந்திடு அங்கு அருணாச்சலா !
சூது செய்து என்னைச் சோதியாது இனி உன்
ஜோதி உருக்காட்டு அருணாச்சலா !
செப்படி வித்தை கற்று இப்படி மயக்கு விட்டு
உருப்படு வித்தை காட்டு அருணாச்சலா !
சேராய் எனில் மெய் நீராய் உருகிக் கண்நீர்
ஆற்று அழிவேன் அருணாச்சலா !
சை எனத் தள்ளில் செய்வினை சுடும் அலால்
உய்வகை ஏது உரை அருணாச்சலா !
சொல்லாது சொலி நீ சொல் அற நில் என்று
சும்மா இருந்தாய் அருணாச்சலா !
சோம்பியாய்ச் சும்மா சுகம் உண்டு உறங்கிடில்
சொல் வேறு என்கதி அருணாச்சலா !
சௌரியம் காட்டினை சழக்கு அற்றது என்றே
சலியாது இருந்தாய் அருணாச்சலா !
ஞமலியில் கேடா நான் என் உறுதியால்
நாடி நின் உறுவேன் அருணாச்சலா !
ஞானம் இல்லாது உன் ஆசையால் தளர்வு அற
ஞானம் தெரித்தருள் அருணாச்சலா !
ஞிமிறு போல் நீயும் மலர்ந்திலை என்றே
நேர் நின்றனை என் அருணாச்சலா !
தத்துவம் தெரியாது அத்தனை உற்றாய்
தத்துவம் இது என் அருணாச்சலா !
தானே தானே தத்துவம் இதனைத்
தானே காட்டுவாய் அருணாச்சலா !
திரும்பி அகந்தனைத் தினம் அகக்கண் காண்
தெரியும் என்றனை என் அருணாச்சலா !
தீரம் இல் அகத்தில் தேடி உந்தனை யான்
திரும்ப உற்றென்ன் அருள் அருணாச்சலா !
துப்பறிவு இல்லா இப்பிறப்பு என் பயன்
ஒப்பிட வாய் ஏன் அருணாச்சலா !
தூய்மன மொழியர் தோயும் உன் மெய் அகம்
தோயவே அருள் என் அருணாச்சலா !
தெய்வம் என்று உன்னைச் சாரவே என்னைச்
சேர ஒழித்தாய் அருணாச்சலா !
தேடாது உற்ற நல் திருவருள் நிதி அகத்
தியக்கம் தீர்த்து அருள் அருணாச்சலா !
தைரியமோடும் உன் மெய் அகம் நாட யான்
தட்டழிந்தேன் அருள் அருணாச்சலா !
தொட்டு அருட்கை மெய் கட்டிடாய் எனில் யான்
நட்டமாவேன் அருள் அருணாச்சலா !
தோடம் இல் நீ அகத்தோடு ஒன்றி என்றும்
சந்தோடம் ஒன்றிட அருள் அருணாச்சலா !
நகைக்கு இடம் இலை நின் நாடிய எனை அருள்
நகையிட்டுப் பார் நீ அருணாச்சலா !
நாணிலை நாட்ட நானாய் ஒன்றி நீ
தாணுவா நின்றனை அருணாச்சலா !
நின் எரி எரித்து எனை நீறு ஆக்கிடுமுன்
நின் அருள் மழை பொழி அருணாச்சலா !
நீ நான் அறப்புலி நிதம் களிமயமா
நின்றிடும் நிலை அருள் அருணாச்சலா !
நுன்ணுரு உனையான் விண்ணுரு நண்ணிட
எண்(ண) அலை இறும் என்று அருணாச்சலா ! |
Category |
Music |
Tags |
Arunachala Akshara Manamaalai Tamil Lyrical Video | Lyrics : Bhagawan Ramana Maharishi | Singer : Unnikrishnan | Video Powered by Kathiravan Krishnan | Tamil Traditional | Vijay Musicals | Thiruvannamalai | Lord Shiva | Aksharamanamalai with Tamil lyrics | BHAKTHI SONGS | ARUNACHALA RAMANA | TAMIL DEVOTIONAL SONGS | VENKATARAMANA | GIRIVALAM SONG | ANNAMALAIYAR | SIVANESA | DEPAJOTHI | JOTHI VADIVANA ANNAMALAI | ANBE SIVAM | ARUNACHALAM |
More Videos