விநாயகர் அகவல் | Tamil Lyrics & Pictures | Avvaiyaar| Seerkazhi Govindarajan - MSV |Vinayagar Agaval
Hellow guys, Welcome to my website, and you are watching விநாயகர் அகவல் | Tamil Lyrics & Pictures | Avvaiyaar| Seerkazhi Govindarajan - MSV |Vinayagar Agaval. and this vIdeo is uploaded by AZAGAPPAN KARUPPAIAH at 2019-12-30T21:22:33-08:00. We are pramote this video only for entertainment and educational perpose only. So, I hop you like our website.
Info About This Video
Name |
விநாயகர் அகவல் | Tamil Lyrics & Pictures | Avvaiyaar| Seerkazhi Govindarajan - MSV |Vinayagar Agaval |
Video Uploader |
Video From AZAGAPPAN KARUPPAIAH |
Upload Date |
This Video Uploaded At 31-12-2019 05:22:33 |
Video Discription |
Meaningful Pictures for every line
Lyrics in Tamil
Seerkazhi Govindarajan- Voice, MS Viswanathan- Music, Namma Kuzhandhaigal movie (1970)
காஞ்சி மகா பெரியவா விநாயகர் அகவல் பற்றி கூறியது
(தெய்வத்தின் குரல் பாகம் 1 & 2)
___
"ஒளவையார் பெரிய கணபதி உபாஸகி. பிரணவ ஸ்வரூபியான விநாயகரைப் புருவமத்தியில் தியானித்துக் கொண்டு, ஒளவையார் யோக சாஸ்திரம் முழுவதையும் அடக்கியதான "விநாயகர் அகவலை”ப் பாடியிருக்கிறாள். அதைப் பாராயணம் செய்தால் பரமஞானம் உண்டாகும்.
இந்த ஒளவையாரைப் பற்றி ஒரு கதை உண்டு. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் ஒளவையாரையும் உடன் அழைத்துப் போக எண்ணினார்கள். அப்போது ஒளவை விக்நேசுவரருக்குப் பூஜை பண்ணிக் கொண்டிருந்தாள். சீக்கிரம் பூஜையை முடித்துத் தங்களுடன் கைலாசத்துக்கு வருமாறு சுந்தரமூர்த்தியும் சேரமானும் அவளை அவசரப்படுத்தி அழைத்தார்கள். அவளோ, “நீங்கள் போகிறபடி போங்கள். உங்களுக்காக நான் என் பூஜையை வேகப்படுத்த மாட்டேன். விநாயக பூஜையே எனக்குக் கைலாசம்” என்று சொல்லி விட்டாள். அவர்கள் அப்படியே கிளம்பி விட்டார்கள். ஒளவை சாங்கோபாங்கமாகப் பூஜை செய்து முடித்தாள். முடிவில் பிள்ளையார் பிரசன்னமாகி அவளை அப்படியே தம் துதிக்கையால் தூக்கி ஒரே வீச்சில் கைலாசத்தில் கொண்டு சேர்த்துவிட்டார்! அவளுக்குப் பிற்பாடுதான் சுந்தரமூர்த்தியும் சேரமான் பெருமாளும் கைலாசத்தை அடைந்தார்கள். அங்கே சேரமான் பெருமாள் திருக்கைலாய ஞான உலாவைப் பாடினார்.
குழந்தைகளுக்காக நீதி நூல்களைச் செய்த அவ்வையார் பெரியவர்களுக்குக்கூட எளிதில் புரியாத பெரிய யோக தத்துவங்களை வைத்துப் பிள்ளையார் மேலேயே ஒரு ஸ்தோத்திரம் செய்திருக்கிறாள். அதற்கு “விநாயகர் அகவல்” என்று பெயர். அளவில் சின்னதுதான் அந்த அகவல் ஸ்தோத்திரம்.
பிள்ளையாரை நினைக்கிறபோது அவ்வையாரையும் நாம் சேர்த்து நினைத்தால் இரட்டிப்பு அநுக்கிரஹம் கிடைக்கும். ‘விநாயகர் அகவலை’ச் சொன்னால் இரண்டு பேரையும் ஒரே சமயத்தில் நினைத்ததாகும். எல்லோரும் இதைச் செய்யவேண்டும். வெள்ளிக்கிழமைதோறும் பக்கத்திலுள்ள பிள்ளையார் கோயிலுக்குப் போய் “விநாயகர் அகவல்” சொல்லி விக்நேச்வரனுக்கு அர்ப்பணம் பண்ணவேண்டும்.
எல்லோரும் “அகவல்” சொல்லி அவரை வழிபட வேண்டும். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இதில் அதிக உரிமை உண்டு. அவ்வை பெண்ணாகப் பிறந்ததால், பெண்கள் எல்லோருக்கும் அவளுடைய இந்த ஸ்தோத்திரத்தில் பாத்தியதை ஜாஸ்தி. அவள் குழந்தைகளுக்கு உபதேசித்த பாட்டி. விநாயகரும் குழந்தைத் தெய்வம். அதனால் அவளுடைய அகவலைக் குழந்தைகள் யாவரும் அவர்முன் பாடி ஸமர்ப்பிக்கவேண்டும். கொஞ்சம் ‘கடமுட’ என்றிருக்கிறதே, அர்த்தம் புரியவில்லையே என்று பார்க்க வேண்டாம். அர்த்தம் புரிந்தாலும், புரியாவிட்டாலும் ‘அவ்வையின் வாக்குக்கே நன்மை செய்கிற சக்தி உண்டு’ என்று நம்பி அகவலைப் பொட்டை நெட்டுருப் போட்டுச் சொன்னாலும் போதும்; அதனால் நாமும் க்ஷேமம் அடைவோம். நாடும் க்ஷேமம் அடையும்.
அழகான பெட்டி ஒன்று கிடைக்கிறது. அதற்குள் நிறைய ரத்தினங்கள் இருக்கின்றன. ஆனாலும் பெட்டியைத் திறக்கச் சாவியைக் காணோம். அதனால் பெட்டி வேண்டாம் என்று விட்டு விடுவோமா? “சாவி கிடைக்கிறபோது கிடைக்கட்டும்” என்று பெட்டியை வைத்துக் கொள்வோம் அல்லவா? இப்போது பெட்டியை விட்டுவிட்டால் பிறகு சாவி கிடைத்தாலும் பிரயோஜனமில்லையே? “விநாயகர் அகவல்” அப்படிப்பட்ட அழகான பெட்டி. அதற்குள்ளே யோக சாஸ்திர விஷயங்கள் ரத்தினம் மாதிரி உள்ளன. அவற்றைப் புரிந்துகொள்கிற புத்தி (சாவி) இப்போது நம்மிடம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இப்போதே பிடித்து அதைச் சொல்லிக்கொண்டிருப்போம். சொல்லச் சொல்ல, தானே அர்த்தமும் புரிய ஆரம்பிக்கும். பிள்ளையாரே அது புரிவதற்கான அநுக்கிரஹத்தைச் செய்வார்.
பிள்ளையார் எல்லாருக்கும் நல்லவர்; எல்லாருக்கும் வேண்டியவர்; சொந்தம். சிவ சம்பந்தமான லிங்கம், அம்பாள், முருகன் முதலிய விக்கிரஹங்களைப் பெருமாள் கோயிலில் பார்க்க முடியாது. ஆனால், பிள்ளையாரும் சிவ குடும்பத்தைதான் சேர்ந்தவர் என்றாலும், விஷ்ணு ஆலயங்களில்கூடப் பிள்ளையார் மட்டும் இருப்பார். ‘தும்பிக்கை ஆழ்வார்’ என்று அவருக்குப் பெயர் சொல்லுவார்கள். மதச்சண்டைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் அவர்.
அதனால்தான் புத்தமதம், ஜைனமதம் எல்லாவற்றிலும்கூட அவரை வழிபடுகிறார்கள். தமிழ் நாட்டிலிருப்பதுபோல் மற்ற ராஜ்யங்களில் தடுக்கி விழுந்த இடமெல்லம் விநாயகர் இல்லாவிட்டாலுங்கூட, பாரத தேசத்திலுள்ள அத்தனை ஸ்தலங்களிலும் ஓரிடத்திலாவது அவர் இருப்பார். “கன்னியாகுமரியிலும் பிள்ளையார்; ஹிமயத்தின் கோடியில் கேதாரத்திலும் ஒரு பிள்ளையார்” என்று ஒரு கணபதி பக்தர் என்னிடம் பெருமைப்பட்டுக் கொண்டார்.
நம் தேசத்தில் மட்டும்தான் என்றில்லை. ஜப்பானிலிருந்து மெக்ஸிகோ வரை உலகத்தின் எல்லத் தேசங்களிலும் விநாயகர் விக்கிரஹம் அகப்படுகிறது! லோகம் பூராவும் உள்ள ஸகல நாடுகளிலும் அவரைப் பல தினுசான மூர்த்திகளில் வழிபடுகிறார்கள்.
அப்படி லோகம் முழுவதற்கும் சொந்தமாக இருக்கப்பட்டவரை நாம் எல்லோரும் தவறாமல் ஆராதிக்க வேண்டும்."
___
REFERENCES:
1. Vinayagar Agaval-Penmai Community Forum
2. Vinayaka Agaval
3. Lamp of Surrender:Vinayagar Agaval-Lyrics and Meaning in Tamil
4. Avaiyar's Vinayagar Agaval
5. An introduction to Auvaiyar’s Vinayagar Agaval|Tamil Guardian
6. விநாயகர் அகவல்:ஒரு தத்துவ அறிமுகம்|தமிழ்ஹிந்து
7. http://veda.wikidot.com/sukshma-sharira
8. http://harappansymbolsandscripts.blog...
9. விநாயகர் அகவல்-Project Madurai
10. https://www.mayiliragu.com/2019/09/vi... |
Category |
Music |
Tags |
vinayagar agaval in tamil | Vinayagar Agaval.Written by Avvaiyaar and sung by Seerkazhi Govindarajan | https://youtu.be/U7E_BUKq3kk | விநாயகர் பக்தி பாடல்கள் | விநாயகர் அகவல் | karpaka vinayakar temple | seetha kalapa | vinayagar agaval with tamil lyrics | vinayagar devotional songs | vinayagar | pillaiyaar | pillaiyar | Ganesha | agaval | akaval | vinayakar | vinayagar agaval | vinayakar agaval | pillaiyarpatti | avvaiyar | avvaiyaar | seergazhi Govindarajan | seerkazhi Govindarajan | https://youtu.be/UWcZavzAy8U |
More Videos